Home » » அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அவமதித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிக்கல்!!!

அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அவமதித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிக்கல்!!!

0:00 / 05:18
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயிற்சிக் காலத்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், நோயாளிகளிடம் அநாகரிகமான முறையில் நடத்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சத்தீஸ்கர் அரசு பரிந்துரை செய்துள்ளது.

சத்தீஸ்கரின் ராமானுஜ் கஞ்ச் (Ramanuj ganj) என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்று வரும் அதிகாரி ஜெகதீஷ் சோன்கர், நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

அப்போது, அந்த அதிகாரி, தனது ஒரு காலை நோயாளியின் படுக்கை மேல் வைத்துக் கொண்டு அவர் நலம் விசாரித்ததை, அங்கிருந்த ஒருவர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பிரசுரித்தார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி காலத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முதலமைச்சர் ராமன் சிங் உத்தரவிட்டுள்ளார்.